ஐபிஎல் 2022 க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒப்படைத்துள்ளார்.
ஐபிஎல்:சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ்.தோனி க்கு பதிலாக புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடங்கியது முதல் கேப்டனாக இருந்து வரும் தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒப்படைத்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
எம்எஸ் தோனி தனக்கான தனி வரலாற்றுக்கு சொந்தக்காரர், அவர் யாராலும் அடைய முடியாத நம்பமுடியாத கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார். சிஎஸ்கே கேப்டனாக 12 சீசன்கள், 9 இறுதிப் போட்டிகள் மற்றும் 4 கோப்பைகளை வென்றுள்ளார்.
2008ல் லீக் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி, நடக்கவிருக்கும் சீசன் தனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் அதற்கான முடிவாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.தோனி ஏற்கனவே அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
“கடந்த சில ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா ஒரு சிறந்த அனுபவாய்ந்த வீரராகவும் முதிர்ச்சியடைந்த விதம்,இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் விதம் சிறந்தவராக பார்க்கப்படுகிறார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…