உலகக்கோப்பை 5-வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகிறது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும்போது ‘ஜார்வோ 69’ என்ற பெயர் உள்ள டீம் இந்தியா ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவரை பாதுகாப்பு படையினர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். அந்த ரசிகர் விராட் கோலியை நோக்கி ஓடினார். அந்த ரசிகரிடம் இனி எந்தப் போட்டிக்கும் வரக்கூடாது என்று விராட் அறிவுறுத்துகிறார் என்பது விராட்டின் பேச்சில் தெரிந்தது.
இந்த கிரிக்கெட் ரசிகர் இந்திய போட்டியில் இப்படி களம் இறங்குவது இது முதல் முறையல்ல. 2021ல் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
ஜார்வோ யார்?
‘டேனியல் ஜார்விஸ்’ என்ற இயற்பெயரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கிரிக்கெட் மைதானத்தில், அவர் ஜெர்சி எண் 69 அணிந்து, ஜார்வோ என்ற பெயரில் நுழைகிறார். ஜார்வோ இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியில் உள்ள கிரேவ்சென்டில் வசிப்பவர்.அவரது பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…