நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் 20-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை ஜேசன் ராய் அடிக்க முயற்சி செய்த போது பந்து பேட்டில் படாமல் கீப்பராக நின்று கொண்டு இருந்த அலெக்ஸ் கேரி சென்றது .பந்தை பிடித்த அலெக்ஸ் கேரி அவுட் என முறையிட நடுவர் தர்மசேனா விக்கெட் கொடுத்து விட்டார்.
அப்போது அதிர்ச்சியடைந்த ஜேசன் ராய் பந்து பேட்டில் படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆனால் இங்கிலாந்து அணி ஏற்கனவே டி .ஆர் .எஸ் பயன்டுத்தி விட்டதால் ஜேசன் ராய் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.இப்போட்டியில் ஜேசன் ராய் 65 பந்தில் 85 ரன் குவித்தார் . அதில் 5 சிக்ஸர் ,9 பவுண்டரி அடங்கும்.
ஜேசன் ராய் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…