பார்வையாளர்களாக இருக்கலாம், ஆனால் பங்கேற்க முடியாது – சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு

Former cricketer Sachin Tendulkar has tweeted that India's sovereignty cannot be compromised.

இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க இயலாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள்.

ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கூறி, வேளாண் சட்டங்கள் எதிர்த்து விவசாயிகள் போராட்டம் மற்றும் டெல்லி டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதற்கு சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

unknown node