இறுதி வரை போராடிய மும்பை ..!! கடைசி ஓவரில் வெற்றியை தட்டி சென்ற டெல்லி !

Published by
அகில் R

IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியின் பவுலர்களை கதிகலங்க வைத்தார்.

அவர் பவர்ப்ளேவில் 15 பந்துக்கு 52 ரன்களுக்கு எடுத்து அசத்தினார். அவரது அதிரடியில் டெல்லி அணி 7 வது ஓவரிலேயே 100 ரன்களை கடத்தது. 27 பந்துகளில் 6 சிக்ஸர் 11 ஃபோர்களுடன்  84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய டெல்லி அணியின் ஷாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து மிரட்டினார், அதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மும்பை அணியின் பந்து வீச்சை தேவையான இடங்களில் பவுண்டரிகள் விளாசி அணிக்கு உறுதுணையாக ரன்களை சேர்த்தனர்.

அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ்ஸின் அதிரடியால் டெல்லி அணி இன்னிங்ஸ் இறுதியில் அணியின் ஸ்கோரை உயர்த்த நன்றாக உதவியது. இறுதியில் 20 ஓவருக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் 250+ ஸ்கோரை பதிவு செய்துள்ளனர்.  அதை தொடர்ந்து மும்பை அணி 258 என்ற இலக்கை எடுப்பதற்கு பேட்டிங் களமிறங்கினர்.

மும்பை அணிக்கு ஒரு நல்ல தொடக்க அமையாததால் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். இதனால் மும்பை அணி பவர்ப்ளே முடிவில் 65-3 என தடுமாறியது. அதன் பிறகு அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியாவும், திலக் வர்மாவும் பொறுமையாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.

திலக் வர்மா ஒரு புறம் பந்தியாவிற்கு உறுதுணையாக நிற்க பாண்டியா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இருவரின் கூட்டணியில் 71 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் பாண்டியா 46 ரன்களில்  ராசிக் சலாம் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அதை தொடர்ந்து வதேராவும் அதே ஓவரில் நடையை கட்டினார். இதனால் மும்பை அணியின் வெற்றி இங்கயே சரிந்தது என கூறலாம். அதன் பிறகு மும்பை அணியின் டிம் டேவிட்டும், திலக் வர்மாவும் போராடினார்கள்.

இருவரும் போராடியும், டெல்லி அணியின் அபார பந்து வீச்சால் இலக்கை எட்ட முடியாமல் மும்பை அணி திணறியது. இதன் காரணமாக இறுதியில் 20 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால், புள்ளிபட்டியலில் டெல்லி அணி 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Published by
அகில் R

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago