[Image Source : Twitter/@ChennaiIPL]
சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். ஆனால், மறுபக்கம் நேஹால் வதேரா நிதானமாக விளையாடி, 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை பந்துவீச்சை பொறுத்தவரையில், மதீஷ பத்திரனா 3, தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…