#BREAKING : முஸ்டாக் அலி: மீண்டும் கோப்பை கைப்பற்றிய தமிழக அணி..!

Published by
murugan

சையது முஸ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தக்க வைத்தது தமிழ்நாடு அணி.

முஷ்டாக் அலி இறுதிப் போட்டியில் இன்று தமிழ்நாடு, கர்நாடகா அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து. முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தனர். 152 ரன்கள் இலக்கு உடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கர்நாடக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி திரில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி கடைசி பந்தில் அதிரடி வீரர் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து தமிழகத்தை வெற்றிபெறச் செய்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாருக்கான் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், இதுவரை மூன்று முறையும் முஷ்டாக் அலி கோப்பையை தமிழக அணி வென்றுள்ளது.

காலிறுதிப் போட்டியில் தமிழக அணி கேரளா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கர்நாடகாவில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

25 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

35 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

1 hour ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago