டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட சில நேரத்தில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவி ராஜினாமா..!

Default Image

பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு  ஓமானில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

மிஸ்பா மற்றும் வக்கார் ஆகியோருக்கு செப்டம்பர் 2019 இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த பொறுப்பை வழங்கியது. அவர்களின் ஒப்பந்தம் 1 வருடம் மீதமுள்ளது. இதற்கிடையில், முன்னாள் ஆஃப் ஸ்பின்னர்கள் சக்லைன் முஷ்டாக் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோரை தற்காலிகமாக இருவருக்கும் பதிலாக அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

ஏனெனில் அடுத்த வாரமே, பாகிஸ்தான் 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 தொடருக்கான போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்காக, நியூசிலாந்து அணி செப்டம்பர் 11 அன்று பாகிஸ்தானை சென்றடையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்