இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா மீது பிருத்வி ஷா பந்தால் அடித்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 274 ரன்கள் எடுத்து உள்ளனர். இன்றைய போட்டியில் இரண்டாவது session தொடங்கியபோது சைனிக்கு சிறிய காயம் காரணமாக மைத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
மேலும், அவருக்கு பதிலாக களத்தில் பிருத்வி ஷா நியமிக்கப்பட்டார். இந்த தொடரில், பிருத்வி ஷாவுக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், சைனிக்கு பதிலாக பீல்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், பீல்டிங் செய்யும்போது பிருத்வி ஷா விக்கெட்டை குறிவைப்பதற்கு பதிலாக, தற்செயலாக சீனியர் வீரர் ரோஹித் சர்மாவை பந்தால் அடித்தார். ரோஹித் மீது பிருத்வி தாக்கிய அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிருத்வி ஷா வீசிய பந்து கடைசி வினாடியில் புல்லட்டின் வேகத்தில் பந்து தன்னை நோக்கி வருவதை கண்ட ரோஹித், அதை தனது கையால் நிறுத்தினார். இதனால், ரோஹித் ஷர்மாவிற்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…