சம்பளத்தில் ஒரு பகுதியை மருத்துவ உதவிக்காக கொடுத்த நிக்கோலஸ் பூரன்..!!

Published by
பால முருகன்

இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக நிக்கோலஸ் பூரன் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை நிதியுதவி கொடுத்துள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. பலர் கிரிக்கெட் வீரர்கள் மருத்துவ உதவிகளுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன், ஐபிஎல் தொடரின் மூலம் தனக்கு கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை  இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக கொடுப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட்டரில் அவர் கூறியிருப்பது ” இன்னும் பல நாடுகள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், குறிப்பாகஇப்போது இந்தியாவில் நிலைமை கடுமையானது. இந்த மோசமான சூழ்நிலைக்கு விழிப்புணர்வு மற்றும் நிதி உதவிகளைக் கொண்டுவருவதற்கு நான் எனது பங்கைச் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பேட் கம்மின்ஸ், பிரட் லீ, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் தங்களது முடிந்த நிதியுதவிகளை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

7 minutes ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

32 minutes ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

1 hour ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

2 hours ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

2 hours ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

3 hours ago