தோனியை புகழ்ந்த ரஹானே ..! மும்பை போட்டிக்கு முன் அவர் பேசியது என்ன ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன அஜிங்க்யா ரஹானே தற்போது சிஎஸ்கே நிர்வாகம் யூடூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், வருகிற ஏப்ரல்-14 ம் தேதி அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இதை தொடரின் 6-வது போட்டியாக சென்னை அணி மோதவுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ரஹானே தற்போது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்தோனி குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அந்த வீடியோவை தற்போது சிஎஸ்கே அணியினர் யூடுப்பில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அவர், ” ஒரு மனிதனால் மட்டுமே நாங்கள் எல்லா இடங்களிலும் விளையாடும் பொழுதும் ஹோம் மேட்ச் விளையாடுகிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும், அது ஒரு அற்புதமான உணர்வு. நாங்கள் அவருடன் விளையாடும்போது  ​​எங்களால்  பல விஷயங்கள்  கற்று கொள்ள முடிகிறது. ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நல்ல மனிதனாகவும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

2011-ல் மான்செஸ்டரில் நான் டி20 அரங்கில் அறிமுகமான முதல் போட்டியின் போது ​​நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். அன்றைய பயிற்சியின் முடிவில் அவர் என்னிடம் வந்து இவ்வளவு நேரம் பயிற்சி செய்ததை நீங்கள் போட்டியில் அப்படியே விளையாடுங்கள். நடைபெறும் போட்டியில்  உங்களை வெளிப்படுத்துங்கள் என்று அடிக்கடி கூறுவார். அவர் கூறியது தற்போது வரை வரை என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது அதை அப்படியே சிஎஸ்கே-வில்  அவர் கேப்டனாக இருந்த போது என்னிடம் கூறினார்.

அவர், நீங்கள் உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் எந்த ஒரு கூடுதல் அழுத்தத்தையும் மனதில் எடுத்து கொள்ளாதீர்கள் என்று எப்போதும் கூறுவார். இது போன்று நமக்கு உறுதுணையாக பல ஆலோசனைகளை கூறுவதால் தான் அவர் மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், அடுத்து நடைபெற இருக்கும் மும்பை அணியுடனான போட்டியில் நாங்கள் எங்களை இன்னும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறோம்”, என்று சிஎஸ்கேவின் பேட்டி ஒன்றில் பேசுகையில் அவர் கூறி இருந்தார்.

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago