தோனியை புகழ்ந்த ரஹானே ..! மும்பை போட்டிக்கு முன் அவர் பேசியது என்ன ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன அஜிங்க்யா ரஹானே தற்போது சிஎஸ்கே நிர்வாகம் யூடூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், வருகிற ஏப்ரல்-14 ம் தேதி அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இதை தொடரின் 6-வது போட்டியாக சென்னை அணி மோதவுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ரஹானே தற்போது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்தோனி குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அந்த வீடியோவை தற்போது சிஎஸ்கே அணியினர் யூடுப்பில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அவர், ” ஒரு மனிதனால் மட்டுமே நாங்கள் எல்லா இடங்களிலும் விளையாடும் பொழுதும் ஹோம் மேட்ச் விளையாடுகிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும், அது ஒரு அற்புதமான உணர்வு. நாங்கள் அவருடன் விளையாடும்போது  ​​எங்களால்  பல விஷயங்கள்  கற்று கொள்ள முடிகிறது. ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நல்ல மனிதனாகவும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

2011-ல் மான்செஸ்டரில் நான் டி20 அரங்கில் அறிமுகமான முதல் போட்டியின் போது ​​நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். அன்றைய பயிற்சியின் முடிவில் அவர் என்னிடம் வந்து இவ்வளவு நேரம் பயிற்சி செய்ததை நீங்கள் போட்டியில் அப்படியே விளையாடுங்கள். நடைபெறும் போட்டியில்  உங்களை வெளிப்படுத்துங்கள் என்று அடிக்கடி கூறுவார். அவர் கூறியது தற்போது வரை வரை என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது அதை அப்படியே சிஎஸ்கே-வில்  அவர் கேப்டனாக இருந்த போது என்னிடம் கூறினார்.

அவர், நீங்கள் உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் எந்த ஒரு கூடுதல் அழுத்தத்தையும் மனதில் எடுத்து கொள்ளாதீர்கள் என்று எப்போதும் கூறுவார். இது போன்று நமக்கு உறுதுணையாக பல ஆலோசனைகளை கூறுவதால் தான் அவர் மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், அடுத்து நடைபெற இருக்கும் மும்பை அணியுடனான போட்டியில் நாங்கள் எங்களை இன்னும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறோம்”, என்று சிஎஸ்கேவின் பேட்டி ஒன்றில் பேசுகையில் அவர் கூறி இருந்தார்.

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

31 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago