ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டையும்,  சாஹல், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன்  109 ரன்களும்,  ரகுவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். 224 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். இலக்கு பெரிது என்பதால் ஆட்டம்தொடக்கமே அடித்து விளையாட ராஜஸ்தான் அணி முடிவு செய்தனர். அதன்படி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 9 பந்தில் 19 ரன்கள் எடுத்து இருந்தபோது வெங்கடேஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வெறும் 12 ரன்கள் எடுத்து 5-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட  ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, 34 ரன்கள் எடுத்திருந்தபோது ரஸ்ஸலிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து துருவ் ஜூரல் 2,  அஷ்வின் 8 ரன்களிலும், ஹெட்மியர் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி 36 பந்தில் அரைசதம் அடித்தார்.

17-வது ஓவரை சுனில் நரேன்  வீசினார். அந்த ஓவரில் ரோவ்மேன் பவல் முதல் 3 பந்தில் 2 சிக்ஸர் , 1 பவுண்டரி விளாசினார். அடுத்த பந்திலே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் களத்தில் அதிரடியாக விளையாடி வந்த  ஜோஸ் பட்லர் 55 பந்தில் சதம் விளாசி  107* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதில் 6 சிக்ஸர்,  9  பவுண்டரி  அடங்கும்.

இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ராஜஸ்தான் 7 போட்டியில் விளையாடி 6 போட்டிகள் வெற்றியும்,  1 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து  உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago