வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர்… ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய 19-ஆவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரூ  அணியும் மோதியது. இப்போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்வென்ற ராஜஸ்தான் பந்துவீச தேர்வு செய்ய முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக விராட் கோலி சதம் விளாசி 113* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 72 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் விளாசினார். இவரைத் தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸ் 33 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 44 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து 184 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்தியிலேயே தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்  இருவரும் நிதானமாகவும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க பெங்களூர் அணி திணறி வந்தனர். இதற்கிடையில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் இருவருமே அரைசதம் விளாசினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெங்களூரூ அணி 15 ஓவரில் இவர்களின் கூட்டணியை பிரித்தனர்.

15 ஓவரில்  சஞ்சு சாம்சன் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் இருவர் கூட்டணியில் 148 ரன்கள் குவிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் 8 பவுண்டரி,  2 சிக்சர் உட்பட  69 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரியான் பராக் 4 ,  துருவ் ஜூரல் 2 ரன்களில்    அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

களத்தில் விளையாடி வந்த தொடக்க வீரர் பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 100* ரன்கள் ஆட்டமிழக்காமல்  கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய  4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூரூ அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி  ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவி 8-வது இடத்தில் உள்ளது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago