கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிசிசிஐ தோனியை சரியான முறையில் நடத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நான் எப்போதும் நேர்மறையான விஷயங்களை பேசுவேன். ஆனால், தற்போது இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பு பிசிசிஐயின் தோல்வி. அவரை போன்ற ஒரு பெரிய வீரர் சரியான வழியில் நடத்தபடவில்லை. தோனியின் ஓய்வு இப்படி நடந்து இருக்க கூடாது. இந்த வார்த்தைகள் எனது இதயத்தில் இருந்து நேராக வருகிறது. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் நினைத்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். இதற்காக பிசிசிஐக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோனி அடுத்து எடுக்கும் முயற்சிகளுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார். தோனியின் ஒவ்வொரு ரசிகருக்கும் வருத்தம் இருக்கும். அது என்னவென்றால், கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.’ என சாக்லைன் முஷ்டாக் தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…