#SAvIND: ஷமியின் அசத்தலான பந்துவீச்சு… 197 ரன்களுக்கு தென்னாபிரிக்கா ஆல் அவுட்!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னின்னிஸில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 272 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 55 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்துள்ளன.

தென்னாபிரிக்கா சார்பில் லுங்கி என்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆரம்பமே விக்கெட்டுகளை மளமளவென இழக்க தொடங்கிய தென்னாபிரிக்கா, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 193 ரன்களில் 8 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணியை விட இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய ஆணியில் முகமது ஷமி 5, பும்ரா 2, ஷர்துல் தாக்கூர் 2 மற்றும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணியை விட 130 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது. இந்திய அணி தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

8 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

9 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

10 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

11 hours ago