CSK வீரர்களை கடுமையாக விமர்சித்த சேவாக்…!

Published by
பால முருகன்

சென்னை அணியின் வீரர்கள் , தங்கள் அணியை ஒரு அரசாங்க வேலையாகவும், சரியாக விளையாடவிட்டாலும், சம்பளம் கிடைக்கும் என்ற நோக்குடன் ஆடுவதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் படுதோல்வியை சந்தித்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேதர் ஜாதவின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக ஜாதவ் மீது சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இந்தநிலையில், கிரிக்பஸ் (CRICBUZZ) ஊடகத்திற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் இது குறித்து கூறுகையில், ” என் பார்வையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில பேட்ஸ்மேன்கள் சென்னை அணியை ஒரு அரசாங்க வேலையாக நினைக்கிறார்கள். சரியாக விளையாடவிட்டாலும், தங்கள் சம்பளத்தைப் பெற்றுவிடுவார்கள் என நினைக்கிறார்கள்.

சென்னை அணிக்கு 167 ரன்கள் தேவைப்பட்டது. தொடக்கத்தில் ஷேன் வாட்சன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அதைபோல் சிறப்பாக விளையாடி வந்திருக்க வேண்டும், ஆனால் கேதர் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆடிய டாட் பந்துகள், அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை” என தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

35 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

2 hours ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago