டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த வீரர்கள்..! யார் யார் தெரியுமா..?

Published by
murugan

ஆசிய கோப்பை விளையாடிய அணி:

உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு உலகக்கோப்பைக்கு முன் விளையாடிய ஆசிய கோப்பை அணிகளில் இருந்து மாற்றங்களைச் செய்யாமல் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற ருதுராஜ் கெய்க்வாட், முதல் மூன்று டி20 போட்டிகளில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி 2 டி20 போட்டிகளில்  துணைக் கேப்டனாக அணியில் சேர உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டி20 ஐ அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக  இந்த டி20 ஐ தொடரில்அவர் விளையாடவில்லை.

மூத்த வீரர்கள் புறக்கணிப்பு:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பெரும்பாலான மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தத் தொடருக்கான இளம் அணியை அறிவித்ததுள்ளது எனவும் இந்த தொடரில்  யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குழு அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றிலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அவேஷ் கான்., முகேஷ் குமார்.

Published by
murugan
Tags: INDvAUS

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago