பஞ்சாப் அணியில் தமிழக வீரர்.. பேருந்தில் வைத்து கொண்டாடிய தமிழக அணி!

Published by
Surya

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி, 5.25 கோடிக்கு எடுத்தது. அதனை தமிழக அணி, பேருந்தில் வைத்து கொண்டாடும் விடியோவை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வந்தது. இதில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வந்தனர்.

இந்த ஏலத்தில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கான் இடம்பெற்றுள்ளார். அவரின் அடிப்படை விலை 50 லட்சமாகும். சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் இவரின் சிறந்த பேட்டிங்கால் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 220.0 என உயர்ந்து, முதலிடம் பிடித்தார். இதன்காரணமாக ஷாருக்கானை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகளிடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி இவரை எடுக்க டெல்லி, பஞ்சாப், மும்பை அணி போட்டிபோட்டுக்கொண்டு வந்த நிலையில், பஞ்சாப் அணி இவரை 5.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள், பேருந்தில் பயணிக்கும்போது ஐபிஎல் ஏலத்தை லைவாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஷாருக்கானை பஞ்சாப் அணி, 5.25 கோடிக்கு எடுத்ததை அறிந்த அவர்கள், பேருந்தில் வைத்தே கைதட்டி ஷாரூக்கானுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். அந்த விடியோவை தினேஷ் கார்த்திக், அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago