டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. அதன்படி,முன்னதாக,இந்திய அணியின்,இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்,உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,தசுன் ஷனகா இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,இலங்கை அணியானது அக்டோபர் 18 அன்று நமீபியாவுக்கு எதிராக அபுதாபியில் முதல் சுற்றில் குழு A இல் தங்கள் போட்டியைத் தொடங்குகிறது.
இலங்கை அணி வீரர்கள்:
தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சயா டி சில்வா(துணைக் கேப்டன்), அவிஷ்கா பெர்னான்டோ, சாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மென்டிஸ், குஷால் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, லஹிரு மதுசங்கா, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப், மகேஷ் தீக்சனா, பிரவீன் ஜெயவிக்ரமா.
காத்திருப்பு வீரர்கள்:
லஹிரு குமாரா, புலினா தாரங்கா, பினுரா பெர்னான்டோ, அகிலா தனஞ்சயா.
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…