விராட் கோலிக்கும் 18 ஜெர்ஸி எண்ணுக்கும் உள்ள பந்தம்.!

Published by
Muthu Kumar

விராட் கோலியின் 18 ஜெர்ஸி எண்ணுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு உணர்வுப்பூர்வ பந்தம்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும் உலகில் பல கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டவரும், களத்தில் எப்போதும் துறுதுறுவென இருப்பவருமான விராட் கோலி, தற்போதைய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக பல சாதனைகள், மற்றும் சதங்களை வைத்துள்ளவர்களில் முக்கியமானவர்.

கிரிக்கெட்டில் சச்சினுக்கு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் எப்படியோ அதுபோல, விராட் கோலிக்கு கவர் ட்ரைவ் ஷாட் மிகவும் பிடித்தமான ஒரு ஷாட். களத்தில் எப்போதும் தனது முழு பங்களிப்பையும் வழங்குவதில் விராட்டிற்கு இணை அவர் தான். கிரிக்கெட்டிற்காக, அணிக்காக தன்னையே முழுதாக அர்ப்பணிப்பதில் சிறந்தவர்.

சச்சினின் ஜெர்சி எண் 10-ஐ போல விராட் கோலியின் ஜெர்சி எண் 18 என்பது அனைவரும் அறிந்ததே. அந்த 18 என்ற எண்ணுக்கும் கோலிக்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி விராட் கோலி சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கோலி கூறும்போது, 18 என்ற எண்ணை நான் தேர்ந்தெடுக்கவில்லை, முதன்முதலில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற போது எனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியில் 18 எண் இருந்தது.

அதன்பிறகு 18 என்ற எண் என் வாழ்வில் முக்கிய இடம்பெற்றுவிட்டது. நான் 2008 இல் இந்திய அணிக்காக முதலில் டெபுட் ஆகும்போது அன்றைய தினம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, என் தந்தை இறந்த தினம் டிசம்பர் 18, என 18 என்ற எண்ணுக்கும் எனக்கும் நிறைய உணர்வுப்பூர்வ தொடர்பு உண்டாகிவிட்டது என விராட் கோலி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago