சொந்த ஊர் சின்னப்பம்பட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய தொடரில் வலை பயிற்சி மேற்கொள்ள தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
பின்னர் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுலபமாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவரே எதிர்பார்க்காத வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. இவரது பந்துவீச்சை பார்த்து பலரும் பாராட்டினர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்பட்டார். நடராஜனை வரவேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சாரட் வண்டியில் பயணித்த நடராஜனுக்கு இந்திய கோடியை போர்த்தி அவ்வூர் மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், நடராஜனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுதான் இந்தியா. இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கும் மேலானது என்று நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ காட்சியுடன் சேவக் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…