அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசிலாந்து.? இன்று இலங்கை அணியுடன் பலப்பரீச்சை.!

Published by
செந்தில்குமார்

NZvsSL: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆனது அரையிறுதியை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 40 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன்படி, இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 16 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளன. இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் எந்த அணி இறுதிக்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் 41வது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோத உள்ளது

இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், ரன்ரேட் அல்லது புள்ளிகளின் அடிப்படையில் அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இதற்கு அடுத்ததாக உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லும்.

தற்போது நியூசிலாந்து +0.398, பாகிஸ்தான் +0.036, ஆப்கானிஸ்தான் +0.338 என்ற அளவில் ரன்ரேட்டை வைத்துள்ளன. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் நியூசிலாந்து 51 முறையும், இலங்கை 41 முறையும் வென்றுள்ளன. 8 போட்டிகள் முடிவில்லாமல், 1 போட்டி சமமாகவும் முடிந்துள்ளது.

இன்று போட்டி நடைபெறும் மைதானத்தை பார்க்கையில், பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானம் சிறிய அளவிலான எல்லைகளை கொண்ட ஒரு மைதானம் ஆகும். இது பேட்டிங் செய்யும் அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரிகள் அடித்து அதிக ரன்கள் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

28 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

1 hour ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago