இப்படி பந்துபோட விராட் கோலி கிட்ட கொடுத்திருக்கலாம்! ஆர்சிபி வீரர்களை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த்!

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : பெங்களூரு அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது எனவும் பேசாமல் விராட் கோலி கிட்ட பந்தை கொடுக்கலாம் எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்து முதலில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி எந்த அளவுக்கு அதிரடியாக விளையாட முடியுமோ அதே அளவிற்கு அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

இதுவரை ஐபிஎல் சீசனில் அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் அணி படைத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பந்துவீச்சாளர்கள் எல்லாம் ரன்களை வாரி வழங்கினார்கள் என்று கூட கூறலாம். குறிப்பாக ஆர் டாப்லி 4 ஓவர்கள் பந்து வீசி 68 ரன்கள் கொடுத்தார். அதைபோல், விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்தார். யாஷ் தயாள், லாக்கி பெர்குசன் ஆகியோரும் 4 ஓவர்கள் பந்துவீசி 50 ரன்களுக்கு மேல் கொடுத்தனர்.

ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பந்துவீச்சு பலமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அதிகம் ரன்கள் கொடுத்த காரணத்தால் இன்னுமே அவர்கள் மீது விமர்சனங்கள் அதிகமாகி இருக்கிறது. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ் ஸ்ரீகாந்த் இப்படி பந்துபோட விராட் கோலி கிட்ட கொடுத்திருக்கலாம் என பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களை விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ் ஸ்ரீகாந்த் ” பெங்களூர் அணியின் பந்துவீச்சு பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர் டாப்லி பந்து வீச வந்த போது, அவருடைய பந்தையும் ஹைதராபாத் வீரர்கள் எங்கயோ பறக்க விட்டார்கள். அவரை போல, லாக்கி பெர்குசன் பந்துகளையும் அடித்து நொறுக்கினார்கள். என்னை பொறுத்தவரை லாக்கி பெர்குசன் சிறப்பான பந்துவீச்சாளர் இல்லை.

பெங்களூர் அணியில் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் வில் ஜாக்ஸ் மட்டும் தான் என்று நான் கூறுவேன். இப்போது பெங்களூர் அணியில் 11 பேட்டர்கள் விளையாடுகிறார்கள். அதில் ஃபாஃப் டு பிளெசிஸை 2 ஓவர்கள் பந்து வீசச் சொல்லுங்கள். கேமரூன் கிரீனுக்கு 4 ஒவர்களைக் கொடுங்கள். விராட் கோலிக்கு 4 ஓவர்கள் கொடுங்கள். நிச்சியமாக விராட் கோலி பந்து வீசி இருந்தால் கூட இந்த அளவிற்கு ரன்கள் வந்து இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

ஏனென்றால், விராட் கோலி நல்ல ஒரு சிறந்த பந்துவீச்சாளர். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி வீரர்கள் பெங்களூர் வீரர்களின் பந்துவீச்சாளர்கள் பந்துகளை பறக்கவிட்ட போது விராட் கோலி ரொம்பவே நொந்துபோனார். அப்போது அவருடைய மன நிலை பேசாமல் நாமளே பந்துவீசிடலாம் என்று தான் தோணியிருக்கும்” எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. இறுதி வரை போராடிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

2 seconds ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

58 minutes ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

4 hours ago