உலகக் கோப்பை 2023: இன்று 2வது லீக் போட்டி.. பாகிஸ்தானை சமளிக்குமா நெதர்லாந்து?

Published by
பாலா கலியமூர்த்தி

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த 282 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  இதையடுத்து, 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 121 பந்துகளில் 152* ரன்களும்,  ரச்சின் ரவீந்திரன் 96 பந்தில் 123* ரன்களும் அடித்து விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளை பெற்றது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் 7 சுமார் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் 2-வது லீக்கில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

1996-ம் ஆண்டு உலக சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த முறை பாபர் அசாம் தலைமையில் களமிறங்குகிறது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 14-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தக்கூடும் என கருதப்படுகிறது. இருப்பினும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வி, உலகக் கோப்பைக்கு முன்பாக இரு பயிற்சி ஆட்டமும் சிறப்பாக அமையவில்லை.

இதனால், நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று உத்வேகத்தை பெற வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் தொடக்கம் தான் கவலைக்குரியதாக உள்ளது. ஆனால், கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது போன்ற பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீசியில் வலுவாக இருக்கிறது. முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தை வைத்து பார்க்கும் போது இது மேலும் ஒரு அதிக ரன் குவிக்கப்படும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நெதர்லாந்துடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானின் கையே ஓங்கி நிற்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரே அணி நெதர்லாந்து தான். தகுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான அந்த அணி இதுவரை 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இந்த தகுதி பெற்றுள்ள நெதர்லாந்து அணியில் தகுதி சுற்றில் விளையாடாத சுழற்பந்து வீச்சாளர்கள் காலின் ஆக்கர்மான், ரால்ஃப் வான் டெர் மெர்வி, வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகிரன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். பேட்டிங்கில் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வெஸ்லி பாரேசி அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.

மேக்ஸ் டவுட், விக்ரம்ஜித் சிங், தேஜாநிடமானுரு, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்,  லோகன் வான் பீக், பாஸ் டி லீட், வான்டெர் மெர்வ் உள்ளிட்டோர் நெதர்லாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து, முடிந்த வரை கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 6 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி கண்டுள்ளது. எனவே, இன்றை உலகக்கோப்பையில் இரண்டாவது லீக் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (c), முகமது ரிஸ்வான் (w/k), இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், ஆகா சல்மான், உசாமா மீர், அப்துல்லா ஷபீக் ஆகியோர் உள்ளனர்.

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (c & w/k), விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீடே, கொலின் அக்கர்மேன், தேஜா நிடமனூரு, ரோலோஃப் வான் டெர் மெர்வே, சாகிப் ஜுல்பிகார், லோகன் வான் பீக், பால் வான் மீகெரென், ரியான் க்ளீன், ஆர்ப்ரியான்ட் ஏங்கல்பிரெக்ட், ஷாரிஸ் அகமது ஆகியோர் உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago