World Cup 2023: உலக கோப்பை தொடக்கவிழா ரத்தா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

Published by
செந்தில்குமார்

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றனர்.

இந்த உலக்கோப்பை தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிற ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக, நாளை அக்-4ம் தேதி (புதன்கிழமை) பிரம்மாண்ட தொடக்க விழாவானது நடைபெற உள்ளது.

இந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிஐசியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடக்க விழாவில் லேசர் ஷோ வானவேடிக்கைகள் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

அதன்படி, இந்த தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், அரிஜித் சிங், தமன்னா பாட்டியா, ஷ்ரேயாஸ் கோஷல் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோர் பாடல்கள் பாடியும் நடனமாடும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உட்பட 10 அணி கேப்டன்களும் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். இந்த தொடக்க விழாவில் ஐசிசி மற்றும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் பல முக்கிய முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, பிசிசிஐ சார்பாக சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு ‘கோல்ட் டிக்கெட்’ ஆனது வழங்கப்பட்டது. இதன் மூலம் இவர்கள் அனைத்து போட்டிகளிலும் பிசிசிஐயின் விருந்தினராக கலந்து கொள்ள முடியும்.

இருந்தும், நாளை நடைபெறவுள்ள தொடக்க விழாவில் கலந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. இந்த தொடக்க விழாவைத் தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி அக்-8ம் தேதி நடைபெறுகிறது. இதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது, உலககோப்பைப் போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் இந்தியாவிற்கு வருகை தந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் vs ஸ்ரீலங்கா, இந்தியா vs மதர்லேண்ட், பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

முக்கிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தொடக்க விழாக்கள் பொதுவான மரபுகளாகும். ஆனால் தற்போது உலகக் கோப்பைக்கான தொடக்க விழா நாளை நடைபெறாது என்கிற உறுதிப்படுத்தபடாத செய்தியானது பரவிவருகிறது. அதன்படி, ரெவ் ஸ்போர்ட்ஸ் என்று செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் தொடக்க விழா நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago