3-ஆம் ஆட்டம் 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 3.30மணிக்கு தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் விராட் கோலி 124 பந்துகளுக்கு 44 , ரஹானே 79 பந்துகளுக்கு 29 ரன்களுடன் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், காலையில் சவுத்தாம்ப்டனில் மழை பெய்தது. இதனால், மைதானத்தில் ஈரப்பதம் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, போட்டி 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 3.30 மணிக்கு தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
unknown node