முன்னாள் கிரிக்கெட் வீரர் சதாஷிவ் பாட்டீல் காலமானார்.!

Default Image

மகாராஷ்டிராவைச் சேர்ந்த  முன்னாள் கிரிக்கெட் வீரர் சதாஷிவ் பாட்டீல் கோலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு 86 வயது.

பாட்டீல் இன்று அதிகாலை கோலாப்பூரில் உள்ள ராய்கர் காலனியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்தார்” என்று கோலாப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் அதிகாரி ரமேஷ் கதம் கூறினார்.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பாட்டீல் 1955 இல் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். இருப்பினும் இதற்குப் பிறகு விளையாட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

பாட்டீல் 1952-1964 க்கு இடையில் மகாராஷ்டிராவுக்காக 36 முதல் தர போட்டிகளில் விளையாடி 866 ரன்கள் எடுத்துள்ளார்.   மேலும், 83 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஞ்சி டிராபியிலும் மகாராஷ்டிராவின் கேப்டனாக பாட்டீல் இருந்தார். இவரின் மறைவுக்கு பி.சி.சி.ஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts