ஐசிசி: ஒருநாள் மற்றும் டி20 அணியில் சிறந்த வீரராக இந்திய வீராங்கனை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஒவ்வொரு நாட்டின் அணிகளிலிருந்தும் ஆண்டின் சிறந்த அணியை தேர்வு செய்து கவுரவித்து வரும் ஐசிசி.
  • 2019-ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் மும்பையைச் சேர்ந்த 23 வயதான ஸ்மிருதி மந்தனா. 2013-ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா இதுவரை 51 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் இரு வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஐசிசி புதிய கவுரவம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோரும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த மகளிர் அணிகளை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசியின் ஒரு நாள் அணியில் இந்தியாவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே மற்றும் பூனம் யாதவ் ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு நாள் அணியில் இடம்பிடித்திருந்த ஸ்மிருதி மந்தனா டி20 அணியிலும் இடம்பிடித்துள்ளார். தீப்தி ஷர்மா மற்றும் ராதா யாதவ் ஆகிய மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். இறுதியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த Ellyse Perry க்கு Rachael Heyhoe-Flint விருதை வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 minutes ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

24 minutes ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

29 minutes ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

2 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

3 hours ago