இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரெவெர் பேலிஸின் இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்ததால் புதிய பயிற்சியாளரை தேடும் தீவிர பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருந்தது.
இவர் பயிற்சியாளராக இருந்தபோது இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும் இந்தாண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 2-2 என கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இவரை போன்று அணி வழிநடத்த ஒரு புதிய பயிற்சியாளரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேடியது. அப்போது கேரி கிறிஸ்டன், அலெக் ஸ்டீவார்ட், சில்வர்வுட் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.இதனால் இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் வருவார் என தகவல் வெளியானது.
கேரி கிறிஸ்டன் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது தலைமை பயிற்சியாளராக இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேர்காணலில் கிறிஸ் சில்வர்வுட் சிறப்பாக செயல்பட்டதால் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ் சில்வர்வுட் 2017-18 ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…