நார்வே செஸ்: வெற்றி பெற்றும் 3-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா! கவலையில் ரசிகர்கள்!

Published by
அகில் R

நார்வே செஸ்: நடைபெற்று வந்த நார்வே செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று அந்த தொடரை கைப்பற்றி உள்ளார்.  மேலும், அவருடன் விளையாடிய அமெரிக்கா நாட்டின்  ஹிக்காரு நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அது சற்று கைநழுவி போனதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதாவது நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா, நகமுராவை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் பிரக்ஞானந்தா முதல் சுற்றான கிளாசிக்கல் முறையில் வெற்றி பெற்று, மறுமுனையில் மேக்னஸ் கார்ல்சன், பாபியானோவுடன் தோல்வி அடைந்திருந்தால் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்திருக்கலாம். ஆனால், கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்றார். இதனால் 2-வது இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தது.

அதுவும் பிரக்ஞானந்தா கிளாசிக்கல் முறையில் நகமுராவை வீழ்த்தினாலே கைவசம் ஆகும். ஆனால், க்ளாசிக்கல் போட்டியானது ட்ரா ஆனது. இதனால் அடுத்த சுற்றன அர்மகெதோன் (Armageddon) சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதால்1 புள்ளிகள் வித்தியாசத்தில் 3-ம் இடம் பிடித்தார்.

ஒரு வேலை அதில் தோல்வியடைந்திருந்தால் 4-ஆம் இடம் பிடித்திருப்பார். இதனால் அவரது ரசிகர்கள் நூலிழையில் வாய்ப்பு போய்விட்டது என கவலையில் இருந்தாலும்  நார்வே செஸ் தொடரில் 3-ம் பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த தொடரை வென்ற மேக்னஸ் கார்ல்சனுக்கு 700,000 நார்வே குரோன் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நகமுராவிற்கு 350,000 நார்வே குரோனும், 3-ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு 200,000 நார்வே குரோனும் பரிசாக வழங்கப்பட்டது.

Published by
அகில் R

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

19 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

42 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago