டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா பதக்க வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்,நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆனால்,அதன்பின்னர் நடைபெத்ர் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.போட்டியின் இறுதியில் 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி டேவிட் வெற்றி பெற்றார்.இதனால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தீபக் புனியா விளையாட இருந்தார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியின்,86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியா,சான் மரினோவின் மைல்ஸ் அமினை எதிர்கொண்டார்.இப்போட்டியின் இறுதியில் 4-2 என்ற கணக்கில் புனியா தோல்வியுற்றார். இதனால்,வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இருப்பினும்,சிறப்பாக விளையாடிய தீபக் புனியா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”தீபக் புனியா வெண்கலத்தை இழந்தார்,ஆனால் அவர் நம் இதயங்களை வென்றார். அவர் திறமையின் சக்திமையம். தீபக்கின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…