TOKYO2020:டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தோல்வி..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்,சீன வீரர் லா மாங்கிடம் தோல்வியுற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல்,போர்ச்சுகீசிய வீரர் டியாகோ அப்பலோனியாவை 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 (2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்து இந்தியாவின் இரண்டாவது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

முதல் வீரர்:

ஏனெனில்,நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று,ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக டேபிள் டென்னிஸின் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்தார் மனிகா பத்ரா.

தோல்வி:

இந்நிலையில்,இன்று காலை நடைபெற்ற ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் சரத் கமல்,சீன வீரர் லா மாங்கை எதிர்கொண்டார்.இறுதியில்,சரத் கமல் 4-1 (11-7 8-11 13-11 11-4 11-4) என்ற கணக்கில் லா மாங்கிடம் தோல்வியுற்றார்.

சீன வீரர் லா மாங் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று நடைபெற்ற,ஆடவர் ஹாக்கியில் நடந்த பூல் ஏ மோதலில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Published by
Edison

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

31 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

3 hours ago