இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமே தமிழ்நாடு […]
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவ வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண […]