சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவின்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.