மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அசாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் உள்ளூர் பயங்கரவாத அமைப்பால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் முதலில் கண்ணிவெடி வைத்து தாக்கல் நடத்தியுள்ளனர். பின்னர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கூறப்படுகிறது. மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு […]