கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிக அளவில் குறைந்துள்ளது.இதனால்,42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கோவை, சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் போன்ற சில மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் […]