திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்பொழுது, திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன் மூர்த்தி இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறது. அதன்படி, ஜெகன் மூர்த்தியிடம் டிஎஸ்பி தமிழரசி, ஜெயராமிடம் டிஎஸ்பி புகழேந்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவாலங்காடு காவல் நிலையத்தின் தனித்தனி அறைகளில் இருவரிடமும் […]