சென்னை : மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோயில் (முருகன் கோயில்) உள்ளது. இங்கு கோயில் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அந்த கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி வருகிறது. இதனால், பக்தர்கள், அர்ச்சகர்களின் தட்டில் வழங்கும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை பொருட்டு, கடந்த 7ஆம் தேதி கோயில் […]