ஆந்திராவில் மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி முழு அடைப்புப் போராட்டம்!
இடதுசாரிக் கட்சியினர் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி, கூடுதல் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி இடதுசாரிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பதியில் ஆந்திர [...]