சென்னை : மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் நேற்று இரவு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ராட்சத ‘கர்டர்’ சரிந்து விழுந்தது. இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போரூர் – நந்தம்பாக்கம் ரயில்வே பாலத்தின் கீழ் வாகனப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராட்சத கிரேன் மூலம் கர்டர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நேற்றிரவு அப்பகுதியில் கடும் போக்குவரத்து […]