சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 102. இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். தோழர் சங்கரய்யாவின் மறைவு அறிந்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். தமிழக […]