குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில்,குறுவை சாகுபடிக்கு கடன் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.அந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகம் முழுவதும் உள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும். அதற்காக ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,கடந்த காலங்களில் […]