வடகிழக்கு பருவமழை தொடக்கம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் 15,16,17,18,19 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.