பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சவீரா பர்காஷ் என்ற இந்துப் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதால், பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷின் தந்தை, ஓம் பிரகாஷ், ஓய்வு பெற்ற மருத்துவர். […]