சென்னை : ஜாக்டோ-ஜியோ அமைப்பு, பல ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. சமீபத்தில், ஜாக்டோ-ஜியோவின் ஒரு நிர்வாகியான மாயவன் என்பவர் விஜய்யை சந்தித்ததாகவும், அவர்கள் அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரியதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பு இதை மறுத்து, விஜய்யுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று […]
சிரமத்தை அரசு சொல்லும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சிலரின் தூண்டுதலுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரையாக வேண்டாம். நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு தமிழக அரசை தள்ள வேண்டாம் .சிரமத்தை அரசு சொல்லும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.அரசின் நிதி நிலையால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.