ஹரியானாவில் காவிமயமாகும் கல்வி; பள்ளிக்கூடங்களில் இனிமேல் “காயத்ரி மந்திரம்”-கட்டாயமாக சொல்ல வேண்டும் என அம்மாநில கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது. ஏற்கனவே அம்மாநில பள்ளிகளில் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாடமாக ஆக்கி உள்ளனர்.கார்ப்பரேட்களின் வேட்டைகாடாக நாட்டை ஆக்கியவர்கள். அந்த ரணத்தை மறக்கடிக்க மறைநூலில் இடம் தேடுகிறார்கள்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை அளிப்பதோடு, 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும் பெற்று ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் தமிழக கல்வித்துறையோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன […]
அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோருக்கே அரசுப் பணி என்று தான் கூறவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நலம்வாழ்வு என்ற பெயரில் நடைபெறும் சித்த மருத்துவ கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை வாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அ.தி.மு.கவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை […]
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் நடக்கிறது. இதில், 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு […]
மாநிலங்களவையில் மத்திய அரசு, நாட்டில் காவலர்கள் படையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அளித்த பதிலில், 19 லட்சத்து 89 ஆயிரத்து 295 காவலர்கள் படையில் பதவிகளில், கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 524 பதவிகள் காலியாக உள்ளதாகக் கூறினார். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள காலியிடங்கள் எனச் சுட்டிக்காட்டிய […]
ரயில்வ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாள்கள் என பல்வேறு பிரிவுகளில் 26,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு, ஐடி, பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும். இடஒதுக்கீடு பிரிவில் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 5 ஆண்டுகளும் […]
தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து. 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் காயமடைந்தனர். திருப்பூர் முத்தூர் பகுதியில் கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கல்லூரி பேருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த போது கூலிப்பாளையம் அருகே பேருந்து ஓட்டுநர் -க்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் காயம் அடைந்தனர். […]
உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்த விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் தொடர்ந்த […]
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், துணைவேந்தர் கணபதியிடமுடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பாராதியார் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், கல்லூரியில் உள்ள உதவி பேராசியர் பணியிடத்திற்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்க பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 29 […]
மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த நபரை கைது செய்தனர். சென்னை எழும்பூரை சேர்ந்த குமார் என்பவர், தமது மகனுக்கு மருத்துவச்சீட்டு வாங்குவதற்காக, ராஜேஸ்வரன் என்பவரிடம் 35 லட்சம் ரூபாயை கடந்த 2013 ஆம் ஆண்டு கொடுத்தார். பூனேவில் உள்ள மருத்தவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறிய ராஜேஸ்வரன், பின்னர் தலைமறைவானார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தர்மபுரியில் […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் […]
தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in, : www.unom.ac.inஎன்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். source: www.dinasuvadu.com
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சிலில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் முறையிட்டார். இதை வல்லுநர் குழு பரிசீலித்ததை அடுத்துச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பிக் கருத்துக் கேட்க இந்திய பார் […]
பணியிடங்கள்! 1. காவல்துறை – இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) மொத்த இடங்கள்: 5538 இடங்கள். ஆண்கள் (பொது)-3877, பெண்கள்-1661. 2. சிறைத்துறை – இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்த இடங்கள்: 365 இடங்கள். ஆண்கள்-319, பெண்கள்-46. 3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மொத்த இடங்கள்: 237 இடங்கள். ஆண்கள்-237. வயது வரம்பு: 1.7.2017 தேதிப்படி 18 முதல் 24க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினருக்கு 2 வருடங்களும், எஸ்சி, எஸ்டி, […]
ஆவின் பால் ஆட்சேர்ப்பு 2018 காலியிடங்கள் : 76 posts Name of Post : Junior Executive (Typing Technician (Opern) Technician (Auto Mechanic) Technician (Plumber) Milk Recorder Grade III Technician (Lab) கல்வி தகுதி : 8th/10th/ 12th/ITI/Any Degree வேலை இடம்: சென்னை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, ஊட்டி சம்பளம் : Rs.5200 – 20200/- with Grade Pay Rs.2400/- கடைசி தேதி : 10.01.2018 Apply Link : http://bit.ly/2DiEX3Q […]
இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு : வேலை வகை: மத்திய அரசு வேலை மேலும் விவரங்களுக்கு அறிய : https://goo.gl/kVA4Uh மொத்த இடங்கள்: 1109 வேலை இடம்: இந்தியா முழுவதும்
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை, ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்தமுறை 1100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு தோல்வியடைந்ததால் அரியலூர் அனிதா என்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை கோரி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு […]
Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறவுள்ளது. Click Here–>https://goo.gl/4iWhKe தேவையான கல்வி தகுதி: Any Degree சம்பளம் : INR 30000 மொத்த காலியிடங்கள்: நிறைய உள்ளது நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Job Fair நாள்: 30/01/2018 இடம் : Coimbatore நேரம்: 8.00AM to 1.00PM. Venue Details Click This Link–>https://goo.gl/4iWhKe
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆய்வு வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டபட்டது.இந்த புதிய ஆய்வக கட்டிடத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஸ்சி தேர்வுக்கு அறிவித்ததில் தற்போது வரை சுமார் 20பேர் விண்ணபித்துள்ளனர்.எனவே தேர்வாளர்கள் அனைவருக்கும் தற்போது புதிய விதிமுறையை அறிவித்துள்ளது டிஎன்பிசி அலுவலகம் . டிஎன்பிஸ்சி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிசெய்து, டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. source: www.dinasuvadu.com