இந்திய கடலோர காவல்படையின் “கனக்லதா பாருவா” என்ற கப்பல் கொல்கத்தாவில் இயக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன் காணொளி காட்சி மூலம் இதை தொடங்கி வைத்தார். இதன் சிறப்பம்சம், சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறனுள்ள ரோந்து கப்பலானது கடத்தல், மீட்பு நடவடிக்கைகளைச் மேற்கொள்ளவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன், முழு வடிவமைப்பும் இந்திய கடலோர காவல்படையால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.