கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது, கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படகில் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி உட்பட 30-க்கும் மேற்பட்ட படக்குழு உறுப்பினர்கள் இருந்தனர். விபத்து மஸ்தி கட்டே பகுதியில் உள்ள மெலினா கொப்பா என்ற இடத்தில், ஆழமற்ற நீர்ப்பகுதியில் […]