கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை காரணமாக ஒரு வாரம் முன் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் […]