இங்குள்ள பிரச்சினைகளை பிரதமரும் அவரது அரசும் இதுவரை புரிந்துகொள்ளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன்விளைவாக உயிரிழப்புகளோ நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது கொரோனா வைரசின் 2 வது அலை நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பூஞ்சை தொற்று நோய்களோ வித விதமாக மக்களிடையே பரவி அவர்களின் உயிரைக் குடித்துவருகிறது. மேலும் ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் வாட்டி எடுக்கின்றது. […]